Published : 12 Jan 2024 06:34 AM
Last Updated : 12 Jan 2024 06:34 AM

ஆந்திர முதல்வரை விமர்சித்ததாக புகார்: அமெரிக்க வாழ் இந்தியரிடம் சிஐடி விசாரணை

யாஷ்

திருப்பதி: ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் யாஷ் (35). தொழில் ரீதியாக பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் குடியேறிய அவர், அங்கேயே வசித்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளரான இவர், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், ஆந்திர அரசுக்கும் எதிராக பல வீடியோ, மீம்ஸ்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், குண்டூரில் உள்ள தனது தாயாரின் உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த யாஷ், அவரை பார்க்க கடந்த டிசம்பர் 23-ம் தேதி அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்தார். இவரது வருகையை ஏற்கெனவே அறிந்திருந்த மாநில சிஐடி போலீஸார், ஹைதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்து, யாஷை கைது செய்தனர். பின்னர் அவரை குண்டூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குண்டூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, அவரது பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க வேண்டுமெனவும் யாஷை எச்சரிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் கூறியது.

இந்நிலையில், திருப்பதி சிஐடி போலீஸார் யாஷை மீண்டும் விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, நேற்று காலை குண்டூரில் இருந்து திருப்பதிக்கு வந்த யாஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு 41-ஏ பிரிவின்படி நோட்டீஸ் மட்டுமே வழங்கி, இவ்வழக்கில் இருந்து யாஷை நீதிமன்றம் விடுவித்தது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரளாக திரண்டு வந்து யாஷுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x