Published : 09 Jan 2018 09:15 AM
Last Updated : 09 Jan 2018 09:15 AM

ரயில்வே திட்டத்தை கண்காணிக்க ‘டிரோன்கள்’

ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரயில் சேவையை திறம்பட நிர்வகிக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய திட்டங்களின் செயல்பாடு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், ரயில் பாதை பராமரிப்பு, உள்கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கண்காணிக்க ஆளில்லா சிறிய விமானங்கள் (டிரோன்கள்) பயன்படுத்தப்படும். திருவிழா, பண்டிகை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது ரயில் நிலையங்களில் குவியும் பயணிகள் நெரிசல் மற்றும் பணி மனைகளை கண்காணிக்கவும் இந்த குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x