Published : 26 Jan 2018 10:10 AM
Last Updated : 26 Jan 2018 10:10 AM

எல்லையில் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது, பாகிஸ்தான் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

எல்லை பாதுகாப்புப் படையினர் அளவில் பேச்சு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று காஷ்மீரில் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள சுசேட்கார் பகுதியில் பாகிஸ்தான் எல்லை படையினருடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று பேச்சு நடத்தினர். இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்பு படை டிஐஜி பி.எஸ்.திமான் தலைமையிலான 5 பேர் குழுவினர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு நடந்தது. அப்போது, இந்திய பகுதிகள் மீது சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய பீரங்கித் தாக்குதல்களுக்கு இந்திய அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை செய்தனர். இந்த தகவல்களை எல்லை பாதுகாப்புப் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x