Published : 13 Jan 2018 09:47 AM
Last Updated : 13 Jan 2018 09:47 AM
சீனா சக்திவாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடாக எப்போதும் இருந்ததில்லை என்று ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று பிபின் ராவத் கூறிய தாவது:
இந்தியாவின் வட எல்லைப் பகுதியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்தப் பகுதியில் சீனா முனைப்பாக இருக்கும்போது அதை எதிர்கொள்ளும் வலிமை இந்திய ராணுவத்திடம் உள்ளது. சீனா வேண்டுமானால் சக்திவாய்ந்த நாடாக இருந்துவிட்டுப் போகட்டும். அதே நேரத்தில் இந்தியா பலவீனமான நாடாக எப்போதும் இருந்ததில்லை. சீன ஊடுருவல்களை சமாளிக்கும் திறமை இந்திய ராணுவத்திடம் உள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. பயங்கரவாதிகளால் ஏற்படும் வலிகளை அந்த நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும். இவ்வாறு பிபின் ராவத் கூறினார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT