Published : 14 Jan 2018 08:20 AM
Last Updated : 14 Jan 2018 08:20 AM
துபாயில் இருந்து 180 பயணிகளுடன் விமானம் ஒன்று நேற்று காலை சண்டிகர் விமான நிலையம் வந்திறங்கியது. இதில் பயணி ஒருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த நபர் 700 கிராம் தங்க சங்கிலி, 233 கிராம் பிரேஸ்லெட் அணிந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரது பர்ஸில் 116 கிராம் தங்க பிஸ்கெட், 10 கிராம் தங்க காசு இருந்தது.
இந்நிலையில் வரி செலுத்தாமல் ரூ.30 லட்சம் தங்க நகைகளுடன் வந்த அந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். பாட்டியாலா நகர வர்த்தகரான இந்நபர் அந்த நகைகளை விற்பதன் மூலம் ரூ.5 லட்சம் லாபம் சம்பாதிக்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT