Last Updated : 07 Jan, 2018 10:46 AM

 

Published : 07 Jan 2018 10:46 AM
Last Updated : 07 Jan 2018 10:46 AM

ரயான் பள்ளியில் சிறுவன் கொலை: குற்றம்சாட்டப்பட்ட மாணவரின்ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு

ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது மாணவன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாணவரின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ஹரியாணா மாநிலம் குர்காவனிலுள்ள ரயான் சர்வதேச பள்ளியில் படித்த 7 வயது மாணவன் பிரதியூமன் தாக்குர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி பள்ளி கழிவறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பிரதியூமனைக் கொலை செய்தது அந்த பள்ளியில் பணிபுரியும் பேருந்து நடத்துநர் என்று குர்வாவ்ன் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் இந்த வழக்கை எடுத்துக்கொண்ட சிபிஐ போலீஸார், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மீது குற்றம்சாட்டினர். இதையடுத்து இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் 16 வயது மாணவர் என்பதால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது குர்காவன் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அந்த மாணவரை ஜாமீனில் அனுப்ப சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாணவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் மாணவர் தரப்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் மீது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. எனவே அதற்குள்ளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட நபர் புதிதாக ஒரு ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்று கொலை செய்யப்பட்ட பிரதியூமன் தாக்குரின் தந்தை பருன் தாக்குர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்நிலையில் ஜாமீன் மீனு மீதான உத்தரவு ஜனவரி 8-ம் தேதி வழங்கப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x