Published : 15 Nov 2023 06:42 AM
Last Updated : 15 Nov 2023 06:42 AM

சஹாரா குழும தலைவர் சுப்ரதோ ராய் காலமானார்

சுப்ரதோ ராய்

மும்பை: சஹாரா இந்திய குழும தலைவர் சுப்ரதோ ராய் காலமானார். அவருக்கு வயது 75. மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக சஹாரா குழுமம் தெரிவித்துள்ளது.

கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் உயிரிழந்தார். கல்வி, ஊடகம், சுற்றுலா, என்டர்டெயின்மென்ட் என பல்வேறு துறை சார்ந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 1970-களில் சஹாரா நிறுவனத்தை அவர் நிறுவினார்.

இந்தியாவில் ரயில்வேவுக்கு அடுத்தபடியாக அதிக ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக சஹாரா திகழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x