Published : 29 Jan 2018 09:35 AM
Last Updated : 29 Jan 2018 09:35 AM
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த மார்க்சிஸ்ட் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
உலகின் சக்திவாய்ந்த நாடாக சீனா உருவாகி வருகிறது. சீனாவுக்கு எதிராக பெரிய அளவில் ராணுவ ரீதியான கூட்டணியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆர்எஸ்எஸ் விருப்பப்படி சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் ராணுவ ரீதியான உறவை இந்தியா ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் ஏற்கெனவே கூடிய கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் காங்கிரசுடன் அரசியல் ரீதியாக எந்த கூட்டணியும் மார்க்சிஸ்ட் வைத்துக் கொள்ளாது. மதவாத சக்திகளுடன் காங்கிரஸ் பலமுறை இணைந்து செயல்பட்டதால்தான் பாஜக வளர்ச்சி அடைந்தது. பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்போம்.
இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT