Published : 30 Jan 2018 10:35 AM
Last Updated : 30 Jan 2018 10:35 AM
உத்தரபிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி (சோலார்) நிலையங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில கூடுதல் மின்சார வளங்கள் துறை அமைச்சர் விர்ஜேஸ் பதக் தெரிவித்தார்.
இதுகுறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
உத்தரபிரதேசத்தில் சூரிய சக்தி மூலம் அதிக அளவில் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இயற்கையான முறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அதன்படி, உத்தரபிரதேசம் தற்போது 22,300 மெகாவாட் சூரிய மின்சக்தி திறன் கொண்ட மாநிலமாக விளங்குகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 10,700 மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அதிக எண்ணிக்கையில் சோலார் மேற்கூரைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT