Published : 23 Oct 2023 04:45 AM
Last Updated : 23 Oct 2023 04:45 AM

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பெண்கள்: இஸ்ரோ தலைவர் விருப்பம்

திருவனந்தபுரம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று கூறியதாவது: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்பதே இஸ்ரோவின் விருப்பம். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும். அடுத்த ஆண்டு அனுப்பப்படவுள்ள ஆளில்லா ககன்யான் விண்கலத்தில் பெண் உருவம் - மனிதனைப் போன்ற ஒரு ரோபோ அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.

மனிதர்களை பூமியிலிருந்து 400 கி.மீ. சுற்றுவட்டப்பாதைக்கு விண்ணுக்கு அனுப்பி 3 நாட்கள் தங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு பின்பு அவர்களை பூமிக்கு பத்திரமாக அழைத்துவருவது ககன்யான் திட்டத்தின்நோக்கம். இந்த திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ககன்யான் திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த பணி மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படவுள்ளது என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x