Published : 13 Jan 2018 09:32 AM
Last Updated : 13 Jan 2018 09:32 AM
டேங்கரில் முழுமையாக நிரப்பப்பட்ட பெட்ரோலை திருடும்போது ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத் நகருக்கு வெளியே உள்ள செங்கிசெர்லா எனும் இடத்தில் நேற்று மதியம் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வந்த ஒரு டேங்கர் லாரியை நிறுத்தி சிலர், அதிலிருந்த பெட்ரோலை வெல்டிங் செய்து திருட முயன்றனர். அப்போது, டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். 5-க்கும் மேற்பட்ட பைக்குகள் தீயில் கருகின.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்படி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். மல்காஜ் கிரி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT