Last Updated : 01 Dec, 2017 03:27 PM

 

Published : 01 Dec 2017 03:27 PM
Last Updated : 01 Dec 2017 03:27 PM

மின்கொள்முதலில் ஏன் பொதுமக்கள் பணம் விரயம் செய்யப்பட வேண்டும்?- ராகுல் காந்தி சாடல்

ஒருநாள் ஒரு கேள்வி என்ற தொடர் கேள்வித்திட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வெள்ளியன்று மின் கொள்முதலில் பொதுமக்கள் பணம் விரயம் செய்யப்படுவது ஏன்? என்று மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக தொகை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“மாநில மின் உற்பத்தி நிலையங்களின் திறனை 62% குறைத்து ஏன் தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றிற்கு ரூ.24க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும், யூனிட் ஒன்றிற்கு ரூ.3க்குப் பதிலாக ரூ.24 செலவிடுவது ஏன்? ஏன் பொதுமக்கள் பணம் விரயம் செய்யப்படுகிறது? 22 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு குஜராத் பதில் கேட்கிறது.” என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னதாக நிதிநிர்வாகச் சீர்கேட்டுக்கும், தனது புகழைப்பரப்பும் மோடியின் செயலுக்கும் குஜராத் மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும் என்று முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் 50 லட்சம் வீட்டுகள் கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்தனர், ஆனால் இதுவரை 4.72 லட்சம் வீடுகளே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன, 50 லட்சம் வீடுகளுக்கு இன்னும் 45 ஆண்டுகள் ஆகுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார் ராகுல் காந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x