Last Updated : 10 Dec, 2017 09:28 AM

 

Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

சக வீரர் சுட்டதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎப்பின் 168-வது பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த நிலையில் முகாமில் பணியிலிருந்த சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் சனத்குமார் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென தனது ஏகே 47 ரக துப்பாக்கியை எடுத்து சக வீரர்கள் மீது சரமாரியாக சுட்டார்.

இதையடுத்து அருகிலிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் சனத்குமாரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கினர். இதில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் அதே இடத்திலேயே பலியாயினர். ஒரு வீரர் காயமடைந்தார். இறந்த 4 பேருக்கும், சனத் குமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பில் முடிந்து துப்பாக்கியால் சுடும் அளவுக்குச் சென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x