Published : 20 Dec 2017 08:13 PM
Last Updated : 20 Dec 2017 08:13 PM
மத்தியில் ஆட்சி புரிந்த எந்த ஒரு ஆட்சியும் மாநிலங்களில் பாஜக அளவுக்கு வெற்றிகளைச் சந்தித்ததில்லை என்று பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் தொண்டர்களைப் பாராட்டி பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்தார்.
அவர் பேசும்போது, இந்திராகாந்தி தலைமை காங்கிரஸ் கட்சி 18 மாநிலங்களில் ஆட்சி கண்டிருந்தது, பாஜக தற்போது 19 மாநிலங்களில் ஆட்சிபுரிகிறது என்று கூறிய மோடி, எதிர்க்கட்சியினரின் தவறான பிரச்சாரத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்று தொண்டர்களை, தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரதமர் மோடி பேசும்போது மக்கள் ஆதரவை பாஜக பெறுவதற்கு கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் செய்த போராட்டத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்த போது 3 முறை கண்ணீரை அடக்கிக் கொண்டார்.
ஆனால் மகரந்த் தேசாய், அர்விந்த் மனியார், வசந்த்ராவ் கஜேந்திரகட்கர் ஆகியோர் கட்சியை வளர்க்கப் பாடுபட்டதை நினைவு கூர்ந்த போது உணர்ச்சிவசப்பட்டதால் அவர் கண்களில் கண்ணீர் வந்தது.
பிடிஐ தகவல்களுடன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT