Published : 19 Dec 2017 09:20 AM
Last Updated : 19 Dec 2017 09:20 AM
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு தார்மீக தோல்வி ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியதாவது:
இத்தருணத்தில் மிகவும் சமநிலையிலான தீர்ப்பு வழங்கியுள்ள குஜராத் மக்களை வாழ்த்துகிறேன். ஆளும் பாஜகவுக்கு இது தற்காலிக மற்றும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால் இது பாஜகவுக்கு தார்மீக தோல்வியாகும். சாமானிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியம், மன உளைச்சல், அநீதிக்கு எதிராக குஜராத் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பூனையின் கழுத்தில் மணியை குஜராத் மக்கள் அணிவித்துள்ளனர்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மம்தா சமீபத்தில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT