Published : 23 Dec 2017 09:33 AM
Last Updated : 23 Dec 2017 09:33 AM

மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே கார் விபத்தில் காயம்

மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே, கார் விபத்தில் காயமடைந்தார்.

சிவசேனா எம்.பி. ஆனந்த் கீதே. மத்தியில் பாஜக அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது. இக்கட்சி சார்பில் ஆனந்த் கீதே கனரகத் தொழில் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள பாலி என்ற இடத்தில் அமைச்சர் ஆனந்த் கீதே நேற்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னாள் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அப்போது சாலையில் திடீரென புகுந்த இரு சக்கர வாகன ஓட்டி மீது மோதுவதைத் தவிர்க்க ஒரு பாதுகாப்பு வாகன ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார்.

அதனால் பின்னால் அமைச்சர் சென்று கொண்டிருந்த காரும், பாதுகாப்பு வாகனத்தின் மீது லேசாக மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த பாதுகாப்பு வாகனமும் அமைச்சரின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் அமர்ந்திருந்த அமைச்சர் ஆனந்த் கீதே தலையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து ரெய்காட் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அனில் பராசாகர் கூறும்போது, ‘‘அமைச்சர் நலமாக இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய காயம் ஏதுமில்லை. அவரிடம் நான் பேசினேன். அவர் விரைவில் தனது பயணத்தைத் தொடருவார். மாற்று வாகனம் வரும் வரை, அரசு ஓய்வில்லத்தில் தங்குவார்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x