Published : 26 Dec 2017 11:28 AM
Last Updated : 26 Dec 2017 11:28 AM
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நெடு நாட்களாகத் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-மொகமது தளபதி நூர் மொகனது தந்த்ரே, செவ்வாய் நள்ளிரவு நடந்த தாக்குதலில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் இருந்து ஓர் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை மாலை சம்பூரா பகுதியில் இருந்து 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய டிஜிபி எஸ்.பி.வைத், ''தேசிய நெடுஞ்சாலை அருகே, ராணுவத்தைத் தாக்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. சம்பூரா பகுதியில் 2 - 3 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். இதையடுத்து நடைபெற்ற தாக்குதலில் ஒரு தீவிரவாதியின் உடலைக் கைப்பற்றியுள்ளோம்.
கொல்லப்பட்ட தீவிரவாதி நூர் மொகனது தந்த்ரே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஏராளமான தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர்'' என்று கூறியுள்ளார்.
என்கவுன்ட்டர் தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரின் பனிஹால்- ஸ்ரீநகர் இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இணைய சேவைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT