Published : 23 Dec 2017 09:25 AM
Last Updated : 23 Dec 2017 09:25 AM
குஜராத்தில் பாஜகவுக்கு சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றாலும் கடந்த தேர்தலை விட 17 இடங்கள் குறைவாக 99 இடங்களில் வென்றது.
இந்நிலையில், மத்திய குஜராத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ரத்தன் சிங் ரதோட் என்பவர் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவருக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரத்தன் சிங் ரதோட்டின் ஆதரவைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT