Published : 18 Dec 2017 08:33 AM
Last Updated : 18 Dec 2017 08:33 AM
காஷ்மீரில் 5 ஆயிரம் இளைஞர்கள் காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை, தீவிரவாதிகளின் முதல் குறியாக இருந்து வருவது காவல்துறையினர்தான். போலீஸாரை குறி வைத்தே தீவிரவாதிகள் அங்கு அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் ஏராளமான போலீஸார் உயிரிழந்திருக்கின்றனர். எனவே, அம்மாநில இளைஞர் கள் காவல்துறையில் சேருவது கடந்த காலங்களில் வெகுவாக குறைந்திருந்தது.
ஆனால், தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணம் மாறி வருகிறது. காவல்துறை பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடத்தப்பட்ட காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், 4,956 இளைஞர்கள் காவலர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி வைத் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர் களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ட்விட்டரில் அவர் வாழ்த் தும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT