Published : 15 Sep 2023 08:59 AM
Last Updated : 15 Sep 2023 08:59 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 18-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கஉள்ளது. இதற்காக திருமலையில், நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் தர்மாரெட்டி கூறும் போது, ‘‘ பிரம்மோற்சவ விழாவுக்கான அடிப்படை ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. வரும் 18-ம் தேதி மாலை சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் சமர்ப்பிக்க உள்ளார். மேலும், சில வளர்ச்சி திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார். பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x