Published : 21 Dec 2017 07:20 PM
Last Updated : 21 Dec 2017 07:20 PM

மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போனதை சுட்டிக்காட்டி சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருப்பது என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 'மக்கள் நலன் கருதி' கோரியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையையும் கடந்து நடந்தேறியுள்ளது.

செப்டம்பர் 3, 2013-ல் உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறைந்தது 3 முறையாவது, ''மக்கள் நலன் கருதியேனும் முறையான விசாரணை நடத்தி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற நோக்கத்தில் விசாரணை முகமை மற்றும் மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க விசாரணையை கண்காணிக்க முடிவெடுத்ததாக பதிவு செய்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ-யை பிரதிநிதித்துவம் செய்தவரும் தற்போதைய அட்டர்னி ஜெனரலுமாகிய கே.கே.வேணுகோபால் வாதிட்ட போது, மத்திய அரசு உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று ஏறக்குறைய அழைப்பே விடுத்தது என்று கூற வேண்டும் எனக் கூறினார்.

மேலும், மத்திய தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதற்கட்டமாக நீதி நிலைநாட்டப்பட தலையீடு அவசியம் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்ததாகவும் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருந்தது. அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 21, முழுநிறைவான, வேகமான விசாரணையை கோருகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

''ரிட் மனுக்கள் மற்றும் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்கள் குறித்து முதற்கண் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம். இது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டுமல்லாது, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையான மத்திய கண்காணிப்பு ஆணையம் சிபிஐக்கு அக்டோபர் 12, 2009-ல் தாக்கல் செய்த அறிக்கை, மற்றும் சிஏஜி தனது ஃபெர்பாமன்ஸ் ஆடிட் அறிக்கையில் தெரிவித்திருந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை சார்பற்ற ஒரு விசாரணையை வலியுறுத்துகிறது'' என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் பதிவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் நியமித்த 2ஜி வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், டிசம்பர் 21-ம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முதற்கட்ட உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

சுப்பிரமணியன் சுவாமி மேற்கொண்ட ரிட் மனு மற்றும் பொதுநல மனுக்களுக்கான மையம் மேற்கொண்ட ரிட் மனுவை அடுத்து நீதிமன்றமும் இதற்குள் வந்தது.

மேலும் சிஏஜி வினோத் ராய் இது குறித்து ஆற்றிய பணியை, ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மிக முக்கியமான பணி. மக்கள் பணத்துக்கான காவலராக அவரது கடமை மிக முக்கியமானது'' என்று வினோத் ராயின் ஆடிட் அறிக்கையையும் பாராட்டியிருந்தது.

டிசம்பர் 16,2010-ல் உச்ச நீதிமன்றம், 122 2ஜி விண்ணப்பங்கள் மீது உரிமங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிஏஜி மிகவும் சீரியசான முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார். இதனால் 'அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சுமார் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக 'அதிக அளவிலான ஆவணங்கள்' இருந்ததால் அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடிவெடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று (டிச.21) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, ''விடுவிப்பு மொத்தமாக தவறு. பல்வேறு மட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பரிசீலிக்கக்கூடிய ஆதாரம் உள்ளது, அதாவது முன் கூட்டியே பிக்ஸ் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள், பினாமி நிறுவனங்களை சில நிறுவனங்கள் உருவாக்கியதற்கான கணிசமான ஆதாரங்கள், பங்குகள் அளவில் சகாயம் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கவே செய்தன'' என்றார்.

மேலும் 2ஜி வழக்கில் உள்ள மக்கள் நலன் என்பதை விளக்கிய உச்ச நீதிமன்றம், குற்றம் செய்பவர்கள் தங்கள் அரசியல் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை முகமைக்கு அழுத்தம் கொடுக்கும் சாத்தியம் உள்ளது. நம் நாட்டில் விசாரணை முகமை சுயேச்சையாக இயங்குவதில்லை. இதனால் சாமானிய மக்கள் மனதில் என்ன எண்ணம் ஏற்படுகிறது எனில் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதே. இது விசாரனை முகமை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான களங்கமாக முடியும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸிடம் கேட்ட போது, ''பல வழக்குகளில் இத்தகைய உச்ச நீதிமன்ற கண்காணிப்பு நன்மையில் முடிந்துள்ளது. ஆனால் நீதிபதிகளை மையமாகக் கொண்ட விசாரணைகளில் கடைசியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சொந்த முடிவுக்கே வர வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் மேல்முறையீடு சரியானதாக இருக்கும்'' என்றார்.

ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்.

தமிழில் : ஆர்.முத்துக்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x