Published : 04 Sep 2023 06:49 AM
Last Updated : 04 Sep 2023 06:49 AM

ஆட்டோ மீது லாரி மோதி 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

பாபட்லா: ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில், குண்டூர் - கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சந்தமாகுலூரு எனும் இடத்தில், ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டல் தொழிலாளர்களான 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். லாரி ஓட்டுநரின் அதிவேகமே கோர விபத்துக்கு காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாபட்லா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x