Published : 13 Dec 2017 10:18 AM
Last Updated : 13 Dec 2017 10:18 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 2 ராணுவச் சாவடிகள் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 5 வீரர்களைக் காணவில்லை.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “குப்வாரா மாவட்டத்தின் நவ்காம் பகுதியில் ராணுவச் சாவடி ஒன்றின் மீது திங்கள்கிழமை இரவு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீரர்களைக் காணவில்லை. இதுபோல் பண்டிப்போரா மாவட்டம் குரேஸ் பகுதியில் ஒரு ராணுவச் சாவடி மீது செவ்வாய்க்கிழமை காலையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 வீரர்களைக் காணவில்லை. இவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. என்றாலும் கடும் பனிப்பொழிவு இதற்கு சவாலாக உள்ளது” என்றார்.
நேற்றைய கடும் பனிப்பொழிவுக்கு பிறகு நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய உட்பட அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT