Published : 20 Dec 2017 09:56 AM
Last Updated : 20 Dec 2017 09:56 AM
குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறிய தாவது:
வளர்ச்சிக்கு உதாரணமாக குஜராத் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் சுட்டிக்காட்டியதை மக்கள் ஏற்கவில்லை. வளர்ச்சிக்கு குஜராத் முன்மாதிரி என்பது பிரதமர் மோடியின் தீவிரமான பிரசாரம். ஆனால், உண்மையில் வளர்ச்சி இல்லை. பாஜகவினர் கூறியதை மக்கள் ஏற்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டிவிட்ட ன. குஜராத் தேர்தல் முடிவுகள் மோடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது. காங்கிரஸைப் பொறுத்தவரை இந்த முடிவுகள் நன்றாகவே உள்ளது. காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது காங்கிரஸூக்கு கிடைத்த தார்மீக வெற்றி. பாஜகவின் வெறுப்புணர்வு பிரசாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். எதிரிகளை அன்பாலும் சகோதரத்துவத்தாலும் வெல்ல முடியுமே தவிர, கோபத்தால் வெல்ல முடியாது என்ற செய்தியை பிரதமர் நரேந்திர மோடிக் கும் பாஜகவினருக்கும் குஜராத் தேர்தல் முடிவுகள் தெரிவித்துள் ளது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT