Published : 31 Dec 2017 08:03 AM
Last Updated : 31 Dec 2017 08:03 AM

சமாஜ்வாதி நிலைப்பாட்டை மீறி முத்தலாக் மசோதாவுக்கு முலாயம் மருமகள் ஆதரவு

முஸ்லிம் ஆண்கள் மனைவியிடம் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா வரவேற்கத்தக்கது. இது பெண்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும். முஸ்லிம் பெண்களின் நீண்டகால கோரிக்கைக்கு இது தீர்வாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x