Published : 04 Dec 2017 12:43 PM
Last Updated : 04 Dec 2017 12:43 PM
காங்கிரஸ் கட்சியின் செல்லப்பிள்ளை ராகுல் காந்தி. அவர் கட்சியின் பெரும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார் என முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது மன்மோகன் சிங்கும் உடன் சென்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், "காங்கிரஸ் கட்சியின் செல்லப்பிள்ளை ராகுல் காந்தி. அவர் கட்சியின் பெரும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார். சோனியா காந்தி கட்சிக்காக 19 ஆண்டுகள் உழைத்துள்ளார். தற்போது, ராகுல் காந்தியின் கைகளில் கட்சி செல்லவிருக்கிறது. இது கட்சிக்கு இன்னொரு அத்தியாயமாக அமையும்" என்றார்.
ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கடந்த 2013-ம் ஆண்டு பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT