Published : 21 Nov 2017 05:16 PM
Last Updated : 21 Nov 2017 05:16 PM

பேட்டியளித்தபோது செல்ஃபி எடுத்தவரின் போனை தள்ளிவிட்ட கர்நாடக அமைச்சர்: வைரலாகும் வீடியோ

பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து செல்ஃபி எடுத்த ஒருவரின் செல்போனை கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தள்ளிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் பெல்காம் பகுதியில் நடந்த குழந்தைகள் உரிமைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் முடிவில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து ஒருவர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். அதைக் கவனித்த அமைச்சர் சிவக்குமார் திரும்பி படாரென செல்போனைக் கீழே தள்ளிவிட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

— ANI (@ANI) November 20, 2017

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சிவக்குமார், ''அடிப்படை பொது அறிவுடன் நடந்துகொள்ள வேண்டும். என்னுடைய கடமையைச் செய்து, செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி ஒருவர் செல்பி எடுக்க முன்வரலாம்? இதுஒரு சாதாரண விஷயம்தான். இதை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது'' என்றார்.

முன்னதாக குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூரு சொகுசு விடுதியில் தங்க வைத்த கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x