Published : 26 Nov 2017 10:24 AM
Last Updated : 26 Nov 2017 10:24 AM
உ.பி. தலைநகரான லக்னோ, 100 ஆண்டுகளில் முதல் பெண் மேயரை தேர்வு செய்து வரலாறு படைக்க உள்ளது.
உ.பி.யில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் இரண்டாவது கட்டமாக லக்னோ உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தரபிரதேச மாநில நகராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்த பிறகு தலைநகர் லக்னோவில் பெண் மேயர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் லக்னோ மேயர் பதவி இம்முறை சுழற்சி முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் 100 ஆண்டில் முதல் பெண் மேயரை லக்னோ இன்று தேர்வு செய்ய உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT