Published : 04 Nov 2017 10:23 AM
Last Updated : 04 Nov 2017 10:23 AM
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 11 நிமிடங்கள் முடக்கப்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் முதல் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். அவர் அதிபரான பிறகு பெரும்பாலும் ட்விட்டர் மூலமே தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். அதிபர் ட்ரம்பை, ட்விட்டரில் சுமார் 4.17 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. சுமார் 11 நிமிடங்களுக்குப் பிறகு ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு செயல்படத் தொடங்கியது.
இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நிறுவன ஊழியர் ஒருவர் அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அந்த ஊழியருக்கு வியாழக்கிழமை கடைசி பணி நாள் ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிபர் மாளிகை தரப்பிலும் ட்விட்டர் நிறுவனத்திடம் கடும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT