Published : 27 Jul 2023 05:59 AM
Last Updated : 27 Jul 2023 05:59 AM

நாட்டின் மக்கள் தொகை 139 கோடியை தாண்டியது - மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: நாட்டின் உத்தேச மக்கள் தொகை 139 கோடி என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு என மக்களவையில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் கூறியிருப்பதாவது: ஐ.நா.,வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையின் மக்கள் தொகை பிரிவு ஆன்லைன் வெளியீட்டின்படி சீனாவின் உத்தேச மக்கள் தொகை 2023 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்ட அறிக்கைப்படி இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 2023 ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 139 கோடியே 23 லட்சத்து 29,000.

கரோனா தொற்று: மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டில் நடத்தப் படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x