Published : 16 Nov 2017 04:22 PM
Last Updated : 16 Nov 2017 04:22 PM

மிசோரமில் முதல் மருத்துவக் கல்லூரி: மத்திய அரசு ரூ.102 கோடி ஒதுக்கீடு

மிசோரம் மாநிலத்தில் முதன் முதலாக மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு 102 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது..

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் மருத்துவக் கல்லூரி இல்லை. இங்குள்ள மாணவர்கள் அண்டை மாநிலமான அஸாம் மற்றும் மேற்குவங்கத்தில் சென்று மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர்.

இம்மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இதையடுத்து அம்மாநில அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுத்தது. இதற்காக மத்திய அரசு 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் லால் தன்ஸாரா கூறுகையில், ''மிசோரமில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு அளித்துள்ள 102 கோடியுடன், மாநில அரசின் பங்காக 11 கோடி ரூபாயும் வழங்கியுள்ளோம். புதிதாக தொடங்க உள்ள மிசோரம் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். மருத்துவ கவுன்சில் ஒப்புதலுக்கு பின் வகுப்புகள் தொடங்கும்'' எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x