Published : 10 Nov 2017 06:47 PM
Last Updated : 10 Nov 2017 06:47 PM

முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றிய பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதி: சுப்பிரமணியம் சுவாமி குற்றச்சாட்டு

பாலிவுட் திரைப்படம் ‘பத்மாவதி’க்கு தடை விதிக்ககோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, ஆனாலும் படத்தைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சை மறையவில்லை.

பத்மாவதி படத்துக்கான நிதியுதவி துபாயிலிருந்து வந்தது என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்துக் கூறியதாவது:

பெரும்பாலான பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதி வருகிறது. இதனை விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது. திரைப்படங்களில் வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பற்றிய பாலிவுட் படங்களுக்கு துபாயிலிருந்து நிதியளிக்கப்படுகிறது. இதனை விசாரிக்க வேண்டுமென அரசுக்கு நான் கோரிக்கை வைக்கப்போகிறேன்” என்றார்.

இதற்கு பதில் அளித்த நடிகர் ரசா முராத், “துபாயிலிருந்து நிதியளிக்கப்படுவதாக அவர் கூறுவதை அவரால் நிரூபிக்க முடியுமா? அலாவுதின் கில்ஜியை வில்லனாகவே இந்தப் படத்தில் காண்பித்துள்ளோம். படத்தைப் பார்ப்பதற்கு முன்பே கருத்து சொல்வது தவறு” என்றார்.

பத்மாவதி படத்தில் ரஜபுத்திர ராணி பத்மாவதி பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஷாகித் கபூர் இவரது கணவராக ராவல் ரத்தன் சிங் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரன்வீர் சிங், டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் பாத்திரத்தில் நடிக்கிறார். டிசம்பர் 1-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x