Published : 20 Nov 2017 09:53 AM
Last Updated : 20 Nov 2017 09:53 AM
நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள் ளார்.
ஐ.நா. சார்பில் சர்வதேச கழிவறை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சுகாதார குறைபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “சர்வதேச கழிவறை தினத்தில், நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் கடமை என மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் திறந்தவெளி கழிப்பிடத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் கழிவறைகளை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பாராட்டுகள். அவர்களுடைய விலை மதிப்பற்ற இந்தப் பணி, தூய்மை இந்தியா திட்டத்துக்கு மேலும் உத்வேகமாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT