Published : 05 Jul 2014 02:18 PM
Last Updated : 05 Jul 2014 02:18 PM
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பதானில், பெண் ஒருவரை கூட்டாக பலாத்காரம் செய்து, அவரை கத்தியால் தாக்கிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு பழத்தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் தனது கணவருக்கு, உணவு கொடுக்க சென்று திரும்பிய 25 வயது மிக்க இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டாக பலாத்காரம் செய்ததாக பதான் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், தப்பிக்க முயன்ற பெண்ணை மூன்று பேரும், கத்தியால் தாக்கியதில் காயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக வந்த புகாரை அடுத்து, இது தொடர்பாக பீர் பகாஷ், டிங்கு மற்றும் ஹனீஃப் என்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT