Published : 04 Jul 2023 07:52 AM
Last Updated : 04 Jul 2023 07:52 AM

க‌ர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக பதவியேற்றார் ஜெகதீஷ் ஷெட்டர்

ஜெகதீஷ் ஷெட்டர்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையடுத்து, கடந்த 30-ம் தேதி நடந்த சட்ட மேலவை இடைத்தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர், திப்பனப்பா கமக்னூர், என்.எஸ். போஸராஜு ஆகிய 3 பேரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர். இவர்கள் 3 பேரும் போட்டியின்றி தேர்வாகினர்.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட 3 பேரும் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது முதல் வர் சித்தராமையா, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் ஆகியோர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x