Last Updated : 31 Oct, 2017 03:13 PM

 

Published : 31 Oct 2017 03:13 PM
Last Updated : 31 Oct 2017 03:13 PM

ஆதாரை கட்டாயமாக்கினால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை பெற ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார் கட்டாய நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெற ஆதார் எண் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நவம்பர் இறுதி வாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.

இந்நிலையில், இதுபற்றி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறுகையில் ''ஆதாரை கட்டாயமாக்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக முடியும். மத்திய அரசின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என எதிர்பார்க்கிறேன். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x