Published : 22 Oct 2017 11:29 AM
Last Updated : 22 Oct 2017 11:29 AM
தெற்காசிய பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பிலிப்பைன்ஸ் செல்கிறார்.
தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு பிலிப்பைன்ஸில் வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிலிப்பைன்ஸ் செல்கிறார். தென்சீனக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த செப்டம்பர் 7-ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா பொறுப்பேற்றபிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT