Published : 28 Oct 2017 03:40 PM
Last Updated : 28 Oct 2017 03:40 PM
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அணுமின் உலை அடுத்த இருவாரங்களில் செயல்படும் என இந்திய அணுமின் கழக தலைவர் கே.எஸ். சர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்தது.
இரண்டாவது அணு உலையில் இருந்து மார்ச் மாதம் முதல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் திடீரென அதில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து இரண்டு வாரங்களில், அந்த அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT