Published : 09 Jul 2014 09:00 AM
Last Updated : 09 Jul 2014 09:00 AM
ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகத்துக்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்கப் படவில்லை.ஏழை, எளியோரை வஞ்சிக்கும் பட்ஜெட்டாகவே இருக்கிறது என கர்நாடக முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை கூறினார்.
பெங்களூரில் செவ்வாய்க் கிழமை, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகத்துக்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்கப் படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் முறையான அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஜாபர் ஷெரீப், கே.எச்.முனியப்பா, மல்லிகார்ஜுன கார் கேவை தொடர்ந்து கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றபோது, ஒட்டு மொத்த மாநிலமும் மகிழ்ச்சி அடைந்தது. மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டுவருவார் என எதிர்பார்த்தோம்.
இந்த பட்ஜெட்டால் சாமானிய மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்டாகவே இருக்கிறது.
ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை ஒருபோதும் ஏற்கமுடியாது.
இந்த திட்டம் நாட்டிற்கும், ஏழைகளுக்கும் மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தனியார் துறைகள் மீது தீராத மோகம் இருப்பதாக நினைக்கிறேன்.
அனைத்து பொதுத் துறையையும் தனியார் வசமாக்க துடிக்கின்றனர்.
வாக்களித்த மக்களை முழுவதுமாக மறந்து விட்டு தங்களுடைய விருப்பப்படி விலைவாசியை உயர்த்தி வருகின்றனர். தங்களை யாரும் எதுவும் கேட்க முடியாது என நினைத்துக் கொண்டிருக் கின்றனர்.அவர்களுக்கு கூடிய விரைவில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
போராட்டம்
பட்ஜெட்டில் கர்நாடகத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு எதிராக கர்நாடக இளைஞர் காங்கிரஸார் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளனர்.
ரயில்வே துறையில் அந்நிய முதலீட்டை கண்டித்து பெங்களூரிலும், மங்களூரிலும் உள்ள சதானந்த கவுடாவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை புதன்கிழமை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்த இருப்பதாக தெரிவித்துள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT