Published : 11 Oct 2017 10:20 AM
Last Updated : 11 Oct 2017 10:20 AM
கர்நாடகாவில் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் ஷிவராம் காரந்த் பெயரிலான விருது, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு மங்களூருவில் நேற்று வழங்கப்பட்டது. இதை கண்டித்து பாஜகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பர பரப்பு உருவானது.
பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்தார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் ஷிவராம் காரந்த் பெயரிலான ‘ஷிவராம் காரந்த் விருது’ நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் மங்களூரு அருகே ஷிவராம் காரந்த் பிறந்த கோதாடோட்டு கிராமத்தில் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பிரகாஷ் ராஜ் விருதை பெற்றுக்கொண்டார். இதற்கிடையே பிரகாஷ் ராஜை கண்டித்து மங்களூரு, உடுப்பி, கோதாடோட்டு உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் மங்களூருவில் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக தலித் அமைப்பினர் பேரணி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT