நாகாலாந்து வெள்ளத்தில் காயமடைந்த யானைக்கு வன்தாராவில் சிறப்பு சிகிச்சை

நாகாலாந்து வெள்ளத்தில் காயமடைந்த யானைக்கு வன்தாராவில் சிறப்பு சிகிச்சை
Updated on
1 min read

ஜாம் நகர்: குஜ​ராத்​தின் ஜாம் நகர் அருகே ரிலை​யன்ஸ் அறக்​கட்​டளை சார்​பில் வன்​தாரா என்ற பெயரில் அடர்ந்த வனப்​பகுதி உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. இதில் பல்​வேறு வன விலங்​கு​கள் உள்​ளன. யானை​களுக்​கான சிறப்பு மருத்​து​வ​மனை​யும் செயல்​படு​கிறது.

ரிலை​யன்ஸ் குழும தலை​வர் முகேஷ் அம்​பானி​யின் இளைய மகன் ஆனந்த் அம்​பானி, வன்​தா​ராவை நிர்​வகித்து வரு​கிறார். இந்த சூழலில் கடந்த ஜூலை​யில் நாகாலாந்து மாநிலத்​தில் ஏற்​பட்ட வெள்​ளத்​தில் ஜாய்​மோதி என்ற 53 வயது பெண் யானை அடித்​துச் செல்​லப்​பட்​டது.

உள்​ளூர் மக்​கள் யானையை மிகுந்த சிரமப்​பட்டு மீட்​டனர். ஆனால் பெண் யானைக்கு உடல் முழு​வதும் பலத்த காயங்​கள் ஏற்​பட்டு உள்​ளன. குறிப்​பாக வலது கண் பார்வை பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இடது காலில் பலத்த காயம் ஏற்​பட்​டிருக்​கிறது.

ஜாய்​மோ​தி​யின் நிலையை அறிந்த ஆனந்த் அம்​பானி, அந்த யானைக்கு வன்​தாரா விலங்​கு​கள் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்க ஏற்​பாடு செய்​தார். இதன்​படி சரக்கு விமானம் மூலம் அந்த யானை அண்​மை​யில் வன்​தா​ரா​வுக்கு கொண்டு வரப்​பட்​டது. தற்​போது வன்​தாரா மருத்​து​வ​மனை​யில் ஜாய்​மோதி யானைக்கு உயர்​தர​மான சிகிச்​சைகள் அளிக்​கப்​படு​கிறது.

நாகாலாந்து வெள்ளத்தில் காயமடைந்த யானைக்கு வன்தாராவில் சிறப்பு சிகிச்சை
பிஎம்டபிள்யு எக்ஸ்1 வீல்பேஸ் கார் இந்​தி​யா​வில் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in