தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான அடித்தளம்: சவுமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்

தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான அடித்தளம்: சவுமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தரமணி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ‘சூப்​பர் சென்னை ஐகான்’ விருதுபெற்ற சவுமியா சுவாமி​நாதன், தூய்​மை​யான சுற்​றுச்​சூழலே ஆரோக்​கிய​மான நகரத்​தின் அடித்​தளம் என மாணவர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

பரு​வநிலை மாற்​றம், ஊட்​டச்​சத்​து, உணவுப் பாது​காப்பு மற்​றும் பொது சுகா​தா​ரம் ஆகிய​வற்​றுக்கு இடையே​யான தொடர்பு குறித்​தும், அறி​வியல் மற்​றும் தலைமை பண்​பில் பெண்​களின் பங்​களிப்​பு, அடுத்த தசாப்​தத்​தில் மருத்​து​வத் துறை​யில் ஏற்​படப்​போகும் புதிய மாற்​றங்​கள் உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்​கும் வகை​யில் ‘சூப்​பர் சென்னை அரட்​டை’ சிறப்பு நேர்​காணல் நிகழ்ச்​சி, தரமணி​யில் உள்ள எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவனத்​தின் தலை​வர் சவுமியா சுவாமி​நாதன், மாணவர்​கள் மற்றும் ஆராய்ச்​சி​யாளர்​களிடையே பேசி​ய​தாவது:

மருத்​துவ சிகிச்சை மட்​டும் ஒரு நோயாளியை குணப்​படுத்த போதாது. வறுமை, ஊட்​டச்​சத்து குறை​பாடு, சமூக பாகு​பாடு, வாழ்​வா​தார சவால்​கள் போன்ற காரணி​களும் சுகா​தா​ரத்​தில் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. பழங்​குடி​யின மக்​களிடையே மேற்​கொள்​ளப்​பட்ட ஆய்​வில் காசநோ​யாளி​களுக்​கும், அவர்​களது குடும்​பத்​தினருக்​கும் சத்​தான உணவு வழங்​கப்​பட்​ட​போது, நோயி​லிருந்து விரை​வில் மீள்​வதோடு மட்​டுமல்​லாமல், குடும்ப உறுப்​பினர்​களுக்கு காசநோய் பரவுவதும் 50 சதவீதம் வரை குறைந்​தது. அதே​போல் உலகளா​விய கொள்​கைகள் உள்​ளூர் மக்​களின் வாழ்க்கை அனுபவங்​களை​யும், தேவை​களை​யும் அடிப்​படை​யாக கொண்​டிருக்க வேண்​டும்.

அர்த்​த​முள்ள ஆராய்ச்சி என்​பது ஆய்​வகத்​தில் மட்​டும் தொடங்குவ​தில்​லை. அது மக்​களின் வாழ்​க்கை​யில் இருந்து தொடங்​கு​கிறது. ஊட்​டச்​சத்​து, காலநிலை மாற்​றம், சமமான மருத்​துவ சேவை என எதை எடுத்​துக் கொண்​டாலும் மக்​களின் பங்​கேற்​பும், அறி​வியலும் இணைந்​தால் தான் நிலை​யான தீர்வுகளை உரு​வாக்க முடி​யும். செயற்கை நுண்​ணறிவு மருத்துவத் துறை​யில் முக்​கிய பங்கு வகித்​தா​லும், அது மனிதர்களை மாற்​று​வதற்​காக அல்ல, சிகிச்​சை​யின் தரத்தை மேம்​படுத்​து​வதற்​காக பயன்​படுத்​தப்பட வேண்​டும்.

சென்னை நகரம் எல்​லை​யின்றி விரிவடைந்​திருந்​தா​லும் மக்​கள் நடப்​ப​தற்​கான நடை​பாதைகளோ, உடற்​ப​யிற்சி செய்​வதற்​கான இடங்​களோ போதிய அளவில் இல்​லை. பசுமை நிறைந்த பொது இடங்​கள், நடை​பாதைகள் மற்​றும் தூய்​மை​யான சுற்​றுச்​சூழலே ஆரோக்​கிய​மான நகரத்​தின் அடித்​தள​மாகும். எனவே, நீர்​நிலைகளின் தரத்தை கண்​காணித்​தல், காற்று மாசு​பாட்டை அளவிடு​தல், திடக்​கழிவு மேலாண்​மையை மேம்​படுத்​துதல் போன்ற பணி​களில் மாணவர்​கள் மற்​றும் பொது​மக்​கள் ‘குடிமக்​களுக்​கான விஞ்​ஞானி’களாக செயல்பட வேண்​டும். அதுவே ஆரோக்​கிய​மான, காலநிலை மாற்​றத்தை எதிர்​கொள்​ளும் நகரத்தை உரு​வாக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற சவுமியா சுவாமி​நாதனுக்​கு, அறி​வியல், பொது சுகா​தா​ரம் மற்​றும் ஆதா​ரப்​பூர்​வ​மான கொள்கை வகுப்​பில் அவர் ஆற்​றிய பங்​களிப்பை பாராட்டி மாதத்​தின் ‘சூப்​பர் சென்னை ஐகான்’ விருதை, ‘சூப்​பர் சென்​னை’ அமைப்​பின் நிர்​வாக இயக்​குநர் ரஞ்​சித் ரத்​தோட் வழங்​கி​னார். எஸ்​.ஆர்​.எஸ்​.வி அண்ட் அசோசி​யேட்ஸ் செல்ல கிருஷ்ணா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்

தூய்மையான சுற்றுச்சூழலே ஆரோக்கியமான அடித்தளம்: சவுமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்
காவல் உட்பட அனைத்து துறையினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் சீமா அகர்வால்: டிஜிபி மகேஷ்குமார் பாராட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in