எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரை ஓரங்களில் சேகரமாகியுள்ள குப்பை கழிவுகளை ஜூன் 14-க்குள் அகற்ற உத்தரவு

குழு அமைத்தது தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்
எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரை ஓரங்களில் சேகரமாகியுள்ள குப்பை கழிவுகளை ஜூன் 14-க்குள் அகற்ற உத்தரவு
Updated on
1 min read

சென்னை: எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்​கரை ஓரங்​களில் சேகர​ மாகி​யுள்ள பிளாஸ்​டிக் உள்​ளிட்ட குப்​பைக்​கழி​வு​களை ஜூன் 14-ம் தேதிக்​குள் முழு​மை​யாக அகற்ற சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் தலை​மை​யில் குழு அமைத்து தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சமீப​கால​மாக காசிமேடு முதல் எண்​ணூர் வரையி​லான கடற்​கரை ஓரங்​களில் பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மோகோல் கழி​வு​கள் அதி​கப்​படி​யாக தேங்கி கடல்​வாழ் உயி​ரினங்​கள் மட்​டுமின்றி சுற்​றுச்​சூழலும் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​தது. இந்த வழக்கு பசுமைத் தீர்ப்​பாய நீதித்​துறை உறுப்​பினர் புஷ்பா சத்​ய​நா​ராயணா மற்​றும் தொழில்​நுட்ப உறுப்​பினர் சத்​யகோ​பால் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

வழக்கை விசா​ரித்த பசுமை தீர்ப்​பாய அமர்​வு, ‘‘எண்​ணூர் முதல் காசிமேடு மீன்​பிடி துறை​முகம் மட்​டுமல்​லாது கோவளம் வரை கிழக்கு கடற்​கரை சாலையை ஒட்​டி​யுள்ள கடற்​கரை ஓரங்​களில் உள்ள குப்​பைக்​கழி​வு​களை மீன்​பிடி தடைக் காலம் முடிவடைய​வுள்ள ஜூன் 14-ம் தேதிக்​குள் முழு​மை​யாக அகற்ற வேண்​டும்’’ என அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளது.

இதற்​காக மாநக​ராட்சி ஆணை​யர் தலை​மை​யில் சென்னை துறை​முக பொறுப்​புக் கழக தலை​வர், மீனவர் நலத்​துறை இயக்​குநர், காசிமேடு மீன்​பிடி துறை​முக மேலா​ளர் ஆகியோர் அடங்​கிய தூய்​மைப் பணிக்​கான கூட்​டுக்​குழு​வை​யும் அமைத்து உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை துறை​முக வளாகத்​துக்​குள்​ளாகவோ, கடற்​கரை ஓரங்​களி​லோ பிளாஸ்​டிக் மற்​றும் தெர்​மோகோல் குப்​பைகளை கொட்​டு​பவர்​களுக்கு கடுமை​யான அபராதம் விதிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்​க​வும் அதி​காரி​களுக்கு தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும், கூவம் ஆறுகளில் விடப்​படும் ஒரு​முறை மட்​டும் பயன்​படுத்​தப்​படும் தெர்​மோகோல் பெட்​டிகளை முற்​றி​லு​மாக தவிர்த்​து, சூரிய சக்​தி​யால் இயங்​கும் குளிரூட்​டப்​பட்ட அறை​களை அமைக்க வேண்​டும் எனவும் பசுமை தீர்ப்​பா​யம் யோசனை தெரி​வித்​துள்​ளது.

இந்த உத்​தரவை அமல்​படுத்​தி​யது தொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் தலை​மையி​லான குழு​வுக்கு உத்​தர​விட்​டுள்ள பசுமை தீர்ப்​பாய அமர்​வு, வழக்கு வி​சா​ரணையை ஜூன்​ 3-ம்​ தேதிக்​கு தள்​ளி​வைத்​துள்​ளது.

எண்ணூர் முதல் கோவளம் வரை கடற்கரை ஓரங்களில் சேகரமாகியுள்ள குப்பை கழிவுகளை ஜூன் 14-க்குள் அகற்ற உத்தரவு
சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in