குற்றாலம் பிரதான அருவியில் குளிப்பதற்காக பழமையான சிலைகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்

குற்றாலம் பிரதான அருவியில் குளிப்பதற்காக பழமையான சிலைகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
Updated on
1 min read

மதுரை: குற்​றாலம் பிரதான அரு​வி​யில் குளிப்​ப​தற்​காக அங்​குள்ள பழமை​யான சிலைகளை சேதப்​படுத்​து​வதை அனும​திக்க முடி​யாது என, உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.

மதுரை எழு​மலை​யைச் சேர்ந்த ராமர் ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: குற்​றால அருவி​கள் வரலாற்று சிறப்​புமிக்​கவை. அருவி​களில் பழமை​யான சிலைகள் உள்​ளன. தற்​போது, குற்​றால அரு​விப் பகு​தி​களில் சீரமைப்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தப் பணி​யின்​ போது, அங்​குள்ள கற்​சிலைகள் பொதுப்​பணித் துறை​யால் சேதப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. விநாயகர் உட்பட பல்​வேறு சிலைகள் அங்​கிருந்து அகற்​றப்​பட்​டுள்​ளன.

இந்த செயல்​பாடு மத நம்​பிக்​கையை புண்​புடுத்​தும் வகை​யில் அமைந்​துள்​ளது. எனவே, குற்​றாலம் பிர​தான அருவி பகு​தி​யில் உள்ள சிலைகளை சீரமைத்​தல் என்ற பெயரில் அகற்​றவோ, மாற்​றவோ கூடாது என்​றும், பழங்​கால சிலைகளை சேதப்​படுத்​தி​ய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் வேல்​முரு​கன், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், குற்​றாலம் பிரதான அரு​வி​யில் நடை​பாதை விரிவுப்​படுத்​தும் பணி நடந்து வரு​கிறது. இதற்கு அப்​பகு​தி​யில் உள்ள 2 கற்​சிலைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. பணி​கள் முடிந்​ததும் அந்த சிலைகள் அதே இடத்​தில் நிறுவப்​படும்.

குற்​றாலத்​தில் இன்​னும் 10 நாட்​களில் சீசன் தொடங்​க​வுள்​ளது. சீசன் தொடங்​கி​னால் குற்​றலாத்​துக்கு பயணி​கள் அதி​கள​வில் வரு​வர். இதனால், சீரமைப்​புப் பணி​களை விரை​வில் முடிக்க வேண்​டும். அதற்​கு, நீதி​மன்​றம் அனு​மதி வழங்க வேண்​டும் என கேட்டு கொள்​ளப்​பட்டது.

அதற்கு நீதிப​தி​கள், குளிப்​ப​தற்​காக 2 ஆயிரம் ஆண்டு பழமை​யான சின்​னங்​களை சேதப்​படுத்​து​வதை அனு​ம​திக்க முடி​யாது. அப்​படி குளிப்​ப​தாக இருந்​தால் குளியல் அறை​யில் போய் குளிக்​கலாம். சீரமைப்​புப் பணியை தொடரக்​கூ​டாது. ஜூன் முதல் வாரம் வரை தற்​போதைய நிலை தொடர வேண்​டும் என உத்​தர​விட்​டனர்.

குற்றாலம் பிரதான அருவியில் குளிப்பதற்காக பழமையான சிலைகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
உதவி ஆய்வாளரை சுட்டு விட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in