உதவி ஆய்வாளரை சுட்டு விட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

உதவி ஆய்வாளரை சுட்டு விட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர் அருகே போலீ​ஸாரை நாட்டு துப்​பாக்​கி​யால் சுட்டு விட்டு தப்​பியோட முயன்ற பிரபல ரவுடியை, போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்டு பிடித்​தனர்.

தூத்​துக்​குடி மினி சகாயபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆர்க் என்ற மரிய அந்​தோனி (35). இவர் மீது தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு காவல் நிலை​யங்​களில் கொலை, கொலை முயற்​சி, கொள்ளை உள்​ளிட்ட சுமார் 30 வழக்​கு​கள் உள்​ளன. இவரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில் திருச்​செந்​தூர் அருகே உள்ள சோனகன்​விளை காணி​யாளன்​புதூரில் ஒரு வீட்​டில் மரிய அந்​தோனி தங்கி இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. உதவி ஆய்​வாளர் ராஜ பிரபு தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் நேற்று மதி​யம் காணி​யாளன்​புதூரில் உள்ள வீட்​டில் இருந்த மரிய அந்​தோனியை பிடிக்க முயன்​றனர்.

அப்​போது, அவர் தன்​னிடம் இருந்த நாட்டு துப்​பாக்​கி​யால் உதவி ஆய்​வாளர் ராஜ பிரபுவை சுட்​டு​விட்டு தப்​பித்து ஓட முயன்​றுள்​ளார். உடனே உஷா​ரான உதவி ஆய்​வாளர் தன்​னிடம் இருந்த துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் மரிய அந்​தோனி​யின் வலது மார்​புக்​கும் வயிற்​றுக்​கும் இடைப்​பட்ட பகு​தி​யில் குண்டு பாய்ந்​தது.

இதனால் காயமடைந்த அவர் சம்பவ இடத்​திலேயே மயங்கி விழுந்​தார். போலீ​ஸார் அவரை உடனடி​யாக திருச்​செந்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு முதலுதவி அளிக்​கப்​பட்ட பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது.

மரிய அந்​தோனி நாட்டு துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் காயமடைந்த உதவி ஆய்​வாளர் ராஜ பிரபு​வும் தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார். அவரை எஸ்​.பி.மதன் பார்த்து நலம் விசா​ரித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் தெரி​வித்​த​தாவது: மரிய அந்​தோனி மீது சுமார் 30 வழக்​கு​கள் உள்​ளன. தூத்​துக்​குடி தென்​பாகம் காவல் நிலை​யம் மீது வெடிகுண்டு வீசிய வழக்​கில் அவர் கைது செய்​யப்​ப​டா​மல் தலைமறை​வாக இருந்​தார். இந்த வழக்கு தொடர்​பாக அவரை பிடிக்க முயன்ற போது தான் நாட்டு துப்​பாக்​கி​யால் எஸ்ஐ ராஜபிரபுவை மரிய அந்​தோணி சுட்​டு​விட்டு தப்​பியோட முயன்​றார்.

இதை தொடர்ந்து தனது உயிரை பாது​காக்க சட்ட விதி​களுக்கு உட்​பட்டு எஸ்ஐ தனது துப்​பாக்​கி​யால் ஒரு ரவுண்டு சுட்​டுள்​ளார். இது தொடர்​பாக திருச்​செந்​தூர் தாலுகா போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர் என்​றார்.

உதவி ஆய்வாளரை சுட்டு விட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்
பாக் நீரிணை கடலை நீந்தி கடந்து பெங்களூரு ஐடி தம்பதி சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in