Published : 07 Apr 2023 06:00 AM
Last Updated : 07 Apr 2023 06:00 AM

தெங்குமரஹாடா வனத்தில் உயிரிழந்த ஆண் யானை

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனத்தில் ஆண் யானை உயிரிழந்து கிடந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு சரகம், தெங்குமரஹாடா பிரிவுக்குட்பட்ட மங்களபட்டி பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று முன்தினம் மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையோரம் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து துணை இயக்குநர் அருண் குமார், வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் முதுமலை புலிகள் காப்பககள இயக்குநர் டி.வெங்கடேஷ் ஆகியோருக்கு வன ஊழியர்கள் தகவல் அளித்தனர். அவர்களின் ஆலோசனையின்படி பிரேத பரிசோதனை நடைபெற்றது.

வனத்துறையினர் கூறும் போது, ‘யானையின் உடல் அழுகியிருந்தது. இதனால், யானை இறந்த பல நாட்களாகியிக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின்னரே யானை உயிரிழந்த காரணம் தெரிய வரும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x