Published : 04 Feb 2023 06:36 AM
Last Updated : 04 Feb 2023 06:36 AM

விவேகானந்தர் மண்டபத்தை 7 லட்சம் பேர் சபரிமலை சீஸனில் பார்வை

நாகர்கோவில்: விவேகானந்தர் மண்டபத்தை 7 லட்சம் பேர் சபரிமலை சீஸனில் பார்வையிட்டுள்ளனர். சபரிமலை சீஸனில் பார்வை கன்னியாகுமரியில் சபரிமலை சீஸன் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி இறுதி வரை நடைபெற்றது. இரு ஆண்டு கரோனா பாதிப்புக்கு பின்னர் இந்த சீஸன் காலத்தில் அதிக மான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிந்தனர்.

இந்நாட்களில் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரி வந்துள்ளனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை மூலம் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் 7 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகில் சென்றுள்ளனர். அதிக பட்சமாக ஜனவரி மாதத்தில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேர் விவேகானந்தர் மண்டபம் சென்றுள்ளனர். பராமரிப்பு பணி காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x