கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் 52 லட்சம் டன் திடக்கழிவு அகற்றம்

கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் 52 லட்சம் டன் திடக்கழிவு அகற்றம்
Updated on
1 min read

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் கொடுங்​கையூர், பெருங்​குடி குப்பை கொட்​டும் வளாகங்​களில் பயோ மைனிங் முறை​யில் இது​வரை 52 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டன.

இது தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகரில் 1 முதல் 8-வது மண்​டலம் வரை கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தி​லும், 9 முதல் 15-வது மண்​டலம் வரை பெருங்​குடி​யில் உள்ள குப்பை கொட்​டும் வளாகத்​தி​லும் திடக்​கழி​வு​கள் பல்​லாண்டு கால​மாக கொட்​டப்​பட்டு வந்​தன.

மாநக​ராட்சி விரி​வாக்​கம், மக்​கள்​தொகை அதி​கரிப்​பு, வணிக செயல்​பாடு​கள் உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால், பெருங்​குடி மற்​றும் கொடுங்​கையூர் ஆகிய 2 வளாகங்​களி​லும் குப்​பைகள் கொட்​டு​வது அதி​கரித்​து, சுற்​றுச்​சூழல் மாசு ஏற்​படும் நிலை உரு​வானது.

இதைத் தொடர்ந்​து, பெருங்​குடி​யிலும், கொடுங்​கையூரிலும் உள்ள திடக்​கழி​வு​கள் பயோ மைனிங் முறை​யில் பிரித்​தெடுத்து நிலத்தை மீட்​டெடுக்​கும் பணி​கள் துரிதப்​படுத்​தப்​பட்​டன.

பெருங்​குடி​யில் 250 ஏக்​கர் பரப்பு கொண்ட வளாகத்​தில், 225 ஏக்​கரில் 27.50 லட்​சம் டன் திடக்​கழி​வு​களை பயோமைனிங் முறை​யில் அகற்றி நிலத்தை மீட்​டெடுக்க ரூ.350.65 கோடி​யில் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

இது​வரை, 26.14 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டு, 94 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. இதர திடக்​கழி​வு​களை பயோ மைனிங் முறை​யில் வரும் மார்ச் மாதத்​துக்​குள் அகற்​றப்பட உள்​ளது.

கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகம் 333 ஏக்​கர் பரப்​பளவு கொண்​டது. இதில் 252 ஏக்​கர் பரப்​பள​வில் திடக்​கழி​வு​கள் கொட்​டப்​பட்​டுள்​ளன.

அங்கு ரூ.641 கோடி​யில் திடக்​கழி​வு​கள் பயோ மைனிங் முறை​யில் பிரித்​தெடுக்​கும் பணி 2024-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கின்​றன.

அகற்​றப்பட வேண்​டிய 66.52 லட்​சம் டன் திடக்​கழி​வு​களில் இது​வரை 26.50 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டு, சுமார் 6 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது.

மீட்​டெடுக்​கப்​பட்ட இந்த நிலத்​தில் சுமார் 3 ஏக்​கர் பரப்​பில் மாநக​ராட்சி சார்​பில் ரூ.57 லட்​சத்​தில் சுற்​று​வேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்​பாசன வசதி​யுடன் சுமார் 1,500 பசுமை மரக்​கன்​றுகள் நட்டு பராமரிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

இவ்​வாறாக, பெருங்​குடி மற்​றும் கொடுங்​கையூரில் இது​வரை மொத்​தம் 52.64 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு செய்​திக்​ குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ மைனிங் முறையில் 52 லட்சம் டன் திடக்கழிவு அகற்றம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in