Published : 21 Mar 2019 07:23 AM
Last Updated : 21 Mar 2019 07:23 AM

தேசியவாத காங். முன்னாள் எம்.பி. பாஜக.வில் இணைந்தார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விஜய்சிங் மொகித் பாட்டீல். மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரான இவர் தற்போது மாதா மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது மகன் ரஞ்சித்சிங் மொகித் பாட்டீல். இவர் தேசியவாத காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்நிலையில் ரஞ்சித்சிங் நேற்று மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ரஞ்சித் சிங் கூறும்போது, “தேசியவாத காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்தேன்” என்றார். மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் அண்மையில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் ரஞ்சித்சிங் பாஜகவுக்கு தாவியது, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x