Published : 24 Apr 2014 12:05 PM
Last Updated : 24 Apr 2014 12:05 PM

ஜம்மு காஷ்மீரில் வாக்குச்சாவடியில் கல்வீச்சு, துப்பாக்கி சூடு

ஜம்மு காஷ்மீரில் வாக்குச்சாவடி ஒன்றின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனை அடுத்து காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது.

இது குறித்து அனாந்த்நாக் காவல்துறை அதிகாரி கூறுகையில், "ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பில்வாமா மாவட்டத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது திடீரென்று வாக்குச்சாவடியின் மீது ஒரு கும்பல் கற்களை வீசித் தாக்கினர். அவர்களை தடுக்க முதலில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தோம், பின்னர் அவர்களை நாங்கள் விரட்டி பிடித்து கைது செய்தோம். இதனை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பின்னர் சிறிது நேரத்தில் தொடங்கியது" என்றார்.

இதே போல ட்ரால், க்யோமோ உள்ளிட்ட சில இடங்களிலும் கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x